Types of gold investment
தங்கம் முதலீடு
- பொதுவாக தங்கத்தை நாம் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக வாங்குவோம். அப்படி வாங்கினால் நகையாக வாங்குவது சிறந்தது.
- அப்படியில்லாமல், விலை குறைவாக உள்ளபோது வாங்கி, விலை அதிகமாகும் போது விற்பது அதாவது, விலை குறைவாக உள்ளபோது முதலீட்டுக்காக தங்கத்தை நகையாக வாங்கினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தங்கத்தை நான்கு விதமாக வாங்கலாம்.
1. நகைக்கடைகளில் தங்கத்தை நகையாக வாங்குவது
- நகைக்கடைக்கு சென்று தங்கத்தை நகையாக வாங்கும் முறையை தான் அனைவரும் பின்பற்றுவோம்.
- இந்த முறையை பின்பற்றினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- ஏனெனில் உதாரணமாக.. ஒரு கிராம் தங்கம் ரூ.6000 எனில், அத்தொகையை மட்டும் பயன்படுத்தி ஒரு கிராம் தங்கம் வாங்கி வர முடியாது.
- ஏனெனில் அந்த தங்கத்திற்கு GST, சேதாரம் (சுமார் 11%) உள்ளிட்ட தொகையை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.
- சில சமயங்களில் செய்கூலி தொகையும் செலுத்த வேண்டியிருக்கும்.
- எனவே முதலீட்டுக்காக தங்கத்தை நகைக்கடைகளில் வாங்கினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- இது லாபத்திற்கு வழிவகுக்காது.மேலும் அந்த தங்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை செய்தால் அப்போதைய விலைக்கு கிடைக்கும் என்பது சாத்தியமற்றது.
- பழைய தங்கம், நகைகளில் உள்ள அழுக்கு உட்பட பலவித காரணங்களுக்காக குறைவான விலைக்கு தான் எடுத்துக் கொள்ளப்படும்.
2. நகைக்கடைகளில் தங்கத்தை நாணயமாக (Coin) வாங்குவது
- நகையாக தங்கத்தை வாங்கினால் தான் செய்கூலி, சேதாரம் போடப்பட்டு, அதிக செலவும், நஷ்டமும் ஏற்படுகிறது.
- நாம் கோல்ட் coin ஆக தங்கத்தை வாங்கினால் நஷ்டம் ஏற்படாது அல்லவா? என பலரும் கோல்ட் coin வாங்குவர். இதிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- ஏனெனில் கோல்ட் coin-க்கும் GST, Making Charge உள்ளிட்டவை செலுத்த வேண்டி இருப்பதால் கோல்ட் coin-க்கும் அதிகமான தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
- எனவே முதலீட்டுக்காக தங்கத்தை கோல்ட் coin-ஆக வாங்கினால் எதிர்பார்க்கும் அதிகமான லாபம் Wellington.
3. தங்கத்தை பங்குச்சந்தைகளில் வாங்குவது
- பங்குச்சந்தையில் தங்கத்தை முதலீட்டுக்காக GOLD ETFல் வாங்கலாம்.
- GOLD ETF என்பதில் வெறும் ரூ.50க்கும் கூட தங்கத்தை வாங்கி கொள்ளலாம். அதிலும் இன்றைய விலைக்கே தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
- பங்குச்சந்தையில் தங்கம் வாங்கும் போது, வாங்கிய தங்கத்தை எவ்வளவு நாள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.
- எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் விற்கலாம் (பங்குச்சந்தை இயங்கும் நேரத்தில்).
4. சாவரின் [Sovereign] தங்கப்பத்திர திட்டத்தின் மூலம் முதலீடு செய்வது
- சாவரின் [Sovereign] தங்கப்பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒரு திட்டமாகும்.
- இந்த திட்டம் திட வடிவ தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.
- இந்த தங்கப்பத்திரம் விற்பனை ஆண்டுக்கு 6 முறை மட்டுமே நடைபெறும். இந்த முறையில் 1 கிராம் முதல் 4 கிலோ தங்கம் வரை வாங்கி கொள்ளலாம்.
- வாங்கிய தங்கத்தின் விலைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும். அதை 6 மாதத்திற்கு ஒருமுறை வங்கி கணக்கில் ரிசர்வ் வங்கி வரவு வைத்துவிடும்.
- இந்த ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தை இந்திய அஞ்சலகத் துறை, வங்கிகள் போன்றவற்றின் மூலம் வாங்கி கொள்ளலாம். மேலும் ஆன்லைனிலும் பெற்றுக்கொள்ளலாம்.
- ஆன்லைனில் பெற்றுக்கொள்வதன் மூலம் கிராமிற்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். அதாவது கிராம் ரூ.6000 எனில் ரூ.5950 செலுத்தி தங்கப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
- இந்த தங்கப்பத்திரம் 8 ஆண்டுகளுக்கு Agreement போட்டு கொடுக்கப்படும். ஒருவேளை 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பணம் தேவையென்றால் 5 ஆண்டுகளுக்கு பிறகு பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
- நினைத்தவுடன் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொள்ள முடியாது என்பது தான் இந்த தங்கப்பத்திர திட்டத்தின் ஒரே ஒரு குறையாகும்.
- தங்கப்பத்திரத்தை விற்பனை செய்ய முடியும். ஆனால் அதில் சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- இந்த திட்டம் யாருக்கு லாபம் என்றால்... ஒரு குறிப்பிட்ட தொகை உங்களிடம் உள்ளது, அந்த தொகை அடுத்த 8 வருடத்திற்கு எதற்கும் தேவைப்படாது எனில், அந்த தொகையை தங்கப்பத்திரமாக மாற்றினால் அதிக லாபம் பார்க்க முடியும்.
- இதில் எது சிறந்தது? தங்கப்பத்திர திட்டத்தில் முதலீட்டுக்கு கொடுக்கப்படும் வட்டி, தங்கத்தின் விலை ஏற்றம் உள்ளிட்டவற்றால் லாபம் அதிகம் கிடைக்கும்.
- இதுவே பங்குச்சந்தைகளில் GOLD ETF என்பதில் முதலீடு செய்தால் 2.5% வட்டி கிடைக்காது.
- ஆனால் நினைத்த உடனேயே பங்குச்சந்தைகளில் அலுவலக நாட்களில் விற்றுக்கொள்ளலாம்.
- மேலும் முதலீடு என்ற நோக்கத்தில் நகைக்கடைகளில் தங்கத்தை வாங்கினால் லாபம் கிடைக்காது.
- ஆனால் அந்த தங்கத்தை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அடகு வைத்தோ, விற்றோ பணம் பெற்றுக்கொள்ள முடியும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக